மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலம் ஒன்றை இன்று இனங்கண்டுள்ளார்.
அவரின் வலையில் இந்த சடலம் சிக்கியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மதுபோதையில் வாவியில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
![]()
