சிலாபம் முதல் பொத்துவில் வரை (கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக) உள்ள கடல் பகுதிகளில் 2.0 முதல் 3.0 மீட்டர் வரையிலான உயரமான அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று ‘அம்பர்’ (Amber) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (13) நண்பகல் 12.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (14) நண்பகல் 12.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
எனவே, இது குறித்து கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
![]()
