கொட்டாவஹெராவில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், பாலுகொல்லவின் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுப் பெண் ஆவார்.
நீர் மோட்டாருக்கு மின்சாரம் வழங்கும் கம்பியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக அப்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கொட்டாவஹெரா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()
