கடந்த அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் வினைத்திறனாக இயங்காத நிலை காணப்பட்ட போது இந்த அரசாங்கம் அட்சிக்கு வந்தவுடன் பொருளாதார மத்திய நிலையங்களை வினைத்திறனாக இயங்க வைக்கும் நடவடிக்கையின் செயற்பாடாகவே கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் 34வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கப்பட்டன.
குறித்த கடைகளை கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன் அரச உத்தியோகத்தர்கள் ,வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
![]()
