ஏதேனும் தடங்கள் ஏற்பட்டாலே தவிர தடையற்ற மின்விநியோகத்தை மேற்கொள்ள எந்த சிக்கலும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதியளித்துள்ளார்.
நொரோச்சோலையில் உள்ள லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
நிலக்கரிப் பற்றாக்குறையால் மின்வெட்டு விதிக்கப்படலாம் என பரவிவரும் பொய்யான செய்திகளை விமர்சித்த அவர், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
![]()
