சவூதி அரேபியாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவிற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, இன்று காலை (28) ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானது.
இதில் 14 பேர் உயிரிழந்ததாகவும், அவர்கள் அனைவரும் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்களே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()
