முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று தனித்தனியாக விசாரணைப் பிரிவுகளில் முன்னிலையாகியுள்ளனர்.நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) சிராந்தி ராஜபக்ஷவுக்கு இன்று காலை 9:30 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

‘சிறிலிய’ (Siriliya) என்ற பெயரில் இயக்கப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளிக்கவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த வங்கிக் கணக்கின்போது சிராந்தி ராஜபக்ஷ வழங்கிய தேசிய அடையாள அட்டை இலக்கம் 222 222 222V எனப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கணக்கு தொடர்பான விசாரணைகள் ‘வசீம் தாஜுதீன்’ கொலை வழக்குடன் தொடர்புடைய சில அம்சங்களையும் தற்போது தொட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “கெஹெல்பத்தார பத்மே” என்பவருடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
முன்னதாக வெளிநாடு சென்றிருந்த காரணத்தினால் ஒரு வார கால அவகாசம் கோரியிருந்த நிலையில், அவர் இன்று விசாரணைக்கு சமூகமளித்துள்ளார்.
![]()
