2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் நீர் கட்டணங்களில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போதைய நீர் கட்டணக் கட்டமைப்பினை எவ்வித மாற்றமும் இன்றி அவ்வாறே பேணுவதற்கு அமைச்சரவையும் தனது அனுமதியை வழங்கியுள்ளது.
நீர் கட்டணத் திருத்தம் என்பது ஆண்டுக்கு இருமுறை மட்டுமே மேற்கொள்ளப்படும் ஒரு கொள்கை முடிவாகும். அதற்கமைய, ஆண்டின் முதல் பாதியில் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
![]()
