கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனி அவர்களின் தலைமையில், கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் முக்கிய அம்சங்கள்: அரச ஓய்வூதியம் அல்லாத தொழிலாளர்கள் எவ்வாறு அரச ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வது என்பது குறித்த வழிகாட்டல்.
சிறுவர்களுக்கான அரச ஓய்வூதியத் திட்டம் மற்றும் அதனால் கிடைக்கும் நீண்டகால நன்மைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டன.கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள்: இந்த நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் கிழக்கு மாகாண சிரேஸ்ட இணைப்பாளர் எஸ். சுதாகரன், திருகோணமலை மாவட்ட செயலக ஒருங்கிணைப்பாளர் பீ. சஜிகா, மாவட்ட இளைஞர் சமூக பாதுகாப்பு சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் நே. தர்ஷன் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எம். ரஷ்மி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
மேலும், கிண்ணியா பிரதேச முச்சக்கர வண்டிச் சங்கத் தலைவர் வாகித், முன்பள்ளி ஆசிரியர்கள், தையல் பயிற்சி மாணவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் எனப் பலரும் இதில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
![]()
