ஹட்டன், திக்கோயா பகுதியில் கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மிகக் குறுகிய காலத்திற்குள் சந்தேகநபரை அடையாளம் கண்டு, அவரைக் கைது செய்த பொலிஸ் அதிகாரிகளைப் பாராட்டும் விசேட நிகழ்வொன்று ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இன்று (26) நடைபெற்றது.
ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசூரியவின் வழிகாட்டலில், ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுகததாச உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
![]()
