
இசைக்கும் கவிதைக்கும் இலக்கணமாகத் திகழும்
என் இனிய நண்பனுக்கு,
உன்னுடைய இந்தச் சிறப்புமிக்க நாளில்,
உன்னை மனதார வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நம்முடைய நீண்ட கால நட்பும், நீ என் மீது காட்டும் மாறாத பாசமும்
நான் பெற்ற பெரும் சொத்துக்கள்.
உன் விரல்கள் மீட்டும் இசையிலும்,
நீ கோர்க்கும் மெட்டுகளிலும் ஆன்மா உறைகிறது.
உன் இசை பலரது இதயங்களை வருடி, அமைதி தரட்டும்.
சொற்களைக் கொண்டு நீ செதுக்கும் கவிதைகள்,
வாழ்வின் எதார்த்தத்தையும் அழகையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.
உன் பேனா முனை இன்னும் பல காவியங்களைப் படைக்கட்டும்.
கலையை விட மேலானது உன்னுடைய குணம்.
அனைவரிடமும் நீ காட்டும் பணிவும், அன்பும்
உன்னை ஒரு சிறந்த மனிதனாக உயர்த்திக் காட்டுகிறது.
“இசையாய் இனித்து, கவிதையாய் மிளிர்ந்து, பண்பால் உயர்ந்து… நீடுழி காலம் நோய் நொடியின்றி, எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ உன்னை மனதார வாழ்த்துகிறேன்”.
செல்வா லண்டன்
![]()
