அம்பலாங்கொடை, கலகொட, டோட்டரி சுனாமி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, கலகொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திமுத்து சம்பத் என்ற இளைஞர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
![]()
