நுளம்புக்கடியில் இருந்து பாதுகாப்பதற்காக, சிறுவர்களை முன்பள்ளிகளுக்கு அனுப்பும் போது கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் பொருத்தமான உடைகளை அணிவித்து அனுப்புமாறு பெற்றோரிடம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நிலவும் சூழலில், நுளம்புக்கடியில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதும், அதன் மூலம் டெங்கு உள்ளிட்ட நுளம்புகளால் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதும் இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கம் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
![]()
