மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய சுமார் 80,000 ரூபா பணத்தை செலுத்தத் தவறியமையால், அளுத்கம தொடருந்து நிலையத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடருந்து திணைக்களத்தின் நிர்வாகத் தவறுகள் காரணமாக இதற்கு முன்னரும் சில தொடருந்து நிலையங்களின் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.
தற்போது மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், நிலையங்களில் அறிவித்தல் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதோடு, பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
![]()
