ஜப்பானின் சிபா மாகாணத்தில் இன்று (26) 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது டோக்கியோவிற்கு அருகிலுள்ள பகுதிகளை உலுக்கிய போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகளும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மதியம் 12:46க்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில், சிபா மாகாணத்தில் சுமார் 50 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
![]()
