மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக விளங்கிய பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று தனது 84ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
![]()
