தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்ற தகவல், தவெக தலைவர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்கு தெரிய வந்ததும், அவர்கள் குஷியாகி இருக்கின்றனர்.

ஆட்சியில் பங்கு இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியதால் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆட்சியில் பங்கு என வலியுறுத்தி வரும் காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஓரிரு நாட்களுக்கு முல் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளனர். தவெகவுடன் கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதிகள், இரண்டாம் இடத்தை கைப்பற்றும் தொகுதிகள் சர்வே விபரங்களை ராகுல் காந்தியிடம் அப்போது பிரவீன் சக்கரவர்த்தி ஒப்படைத்துள்ளார்.
![]()
