
ரத்மலானை தர்மராம வீதிப் பகுதியில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் ஸ்டம்புகளால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்கள் இன்று (07) கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் ரத்மலானை ஸ்ரீ தர்மராம வீதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
![]()
